வாழ்க்கைப் பெருந்தீவில்
அதிரகசிய மறைபொருள் 
மந்திரமென்று எதுவுமே இல்லை

சுவாரசியமான ஓர் உயிர்
கிசுகிசுப்புத் தூரத்திலேயே
இணக்கமாய் உன்னோடு 
இணைந்திருந்தால்

வெறுமைப் பொழுதுகளின்
எல்லையில்லா
நீளமாவது? அகலமாவது?

அவை அனைத்துக்கும்
ஆழ்கடல் நங்கூரமாய்
ஓர் இரும்பு முற்றுப்புள்ளி
அகற்றமுடியாததாய்
இறக்கப்பட்டிருக்கும்
நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும்
கோடிப் பிறப்புகள் 
குழுமிப் பூத்திருக்கும்

வேறொரு மாய மந்திர 
தேவ தத்துவதும் 
இல்லை இந்த வாழ்க்கையில்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: