அதேதான் என் அன்பே
உன் குரலில் நான் கரைகிறேன்
உன் குழலில் நான் கரைகிறேன்
உன் விழியில் நான் கரைகிறேன் 
உன் மொழியில் நான் கரைகிறேன்
உன் விரலில் நான் கரைகிறேன்
உன் வளைவில் நான் கரைகிறேன்
உன் இதழில் நான் கரைகிறேன்
உன் தமிழில் நான் கரைகிறேன்
உன் கழுத்தில் நான் கரைகிறேன்
உன் கவியில் நான் கரைகிறேன்
உன் அழகில் நான் கரைகிறேன்
உன் அணைவில் நான் கரைகிறேன்
இன்னும் நான் கரைகிறேன்
உன் எதிலும் நான் கரைகிறேன்
ஆயினும் என் அன்பே
இத்தனை இத்தனையாய்
நான் இப்படி இப்படியாய்
கரைந்து கரைந்து
உருகும்போதும்
எப்படி எப்படித்தான் என் ஆயுள்
இப்படி இப்படியாய்க் கூடுகிறதோ
என்று
அந்தச் செப்படி வித்தை
அறியாதவனாய் அதிசயிக்கிறேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: