சிரி மகிழ் பூரித்துப்போ

உன்
பிணத்தின் முன்னின்று
அழப்போவது எத்தனை பேர்
என்றெண்ணி
இன்றே வருந்துவது
மரணத்திற்கு
நிகர்

இன்று இப்பொழுது
உன்னோடு சிரிப்பவர்களும்
உன்னைச் 
சிரிக்க வைப்பவர்களும்
போலியானவர்களாய் 
இருப்பினுங்கூட
அதுதான் பிறப்புக்கு 
நிகர்

சிரி
மகிழ்
பூரித்துப்போ

எவனும் உன் மரணத்தில்
உனக்காக 
ஒரு சொட்டுக் கண்ணீர்விட்டு
அழத் தேவையில்லை
அதுவும் 
இன்று உன்னைக்
கதறக் கதற அழவைத்துவிட்டு

அன்று
அறியாமையில்
ஆயிரம் ஆயிரம் சிரிப்பு
இன்று
அறிய அறிய
அழுகை ஒன்றே அவதரிப்பு

அந்த
அரைகுறை அறிவை
பூரண அறிவாக்கு
அழாதே எழு

சிரி
மகிழ்
பூரித்துப்போ

No comments: