நெஞ்சுடையச் செய்திடுமோ
என்றஞ்சி
தன் பொன் முட்டையை
அடைகாத்துத்
தவித்துத் துடித்துக்
காத்திருக்கும் மௌனம்

சட்டென்று
தாறுமாறாய் உடைந்து
வெளியேறும்
தகரக் குஞ்சுகளாய்

மௌனக்
கவிமொழியறியா
மந்தைகளிடம்

அன்புடன் புகாரி
20170321

No comments: