நல்லவனாய்
இருப்பது முக்கியமா
நல்லவன் என்று
பெயர் எடுப்பது முக்கியமா

நல்லவனாய்
இருப்பவனெல்லாம்
நல்லவன் என்று
பெயர் எடுப்பதில்லை

நல்லவன் என்று
பெயர் எடுத்தவனெல்லாம்
நல்லவனாய் இருப்பதில்லை

நல்லவனாகவும் இருந்து
நல்லவன் என்று
பெயரும் எடுத்தவன்
அரிதிலும் அரிதானவன்

அப்படி அரிதானவன்கூட
எந்தக் காலமும்
எல்லோரிடத்தும்
நல்லவன் என்று
பெயரெடுத்ததுமில்லை

ஒரு கெட்டவன்
மனிதர்களின்முன்
நல்லவன் என்று
பெயரெடுக்க முடியும்

ஒரு நல்லவன்
மனிதர்களின்முன்
கெட்டவன் என்று
பெயரெடுத்திருந்தாலும்
இறைவனின்முன்
நல்லவன் என்றே
பெயரெடுப்பான்

நல்லவனாய் இல்லாமல்
நல்லவனாய்ப்
பெயர் மட்டும் எடுக்கப்
பாடுபட்டவனுக்கு
இரு சபைகளில் தண்டனை
உறுதியாக உண்டு

ஒன்று
மனச்சபை
மற்றது
இறைச்சபை

No comments: