உறவுகளுக்கிடையே
புரிந்துணர்விருந்தால்
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டோடும்

ஒருவரை ஒருவர்
புரிந்துகொள்ளாவிட்டால்
சண்டை சச்சரவுகள்
வளரவே செய்யும்

ஆனால்
விட்டுத்தள்ளு என்ற
உயர்ந்த மனம் இருந்தால்
மீண்டும் மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டோடும்

புரிந்துணர்வு
மற்றும்
விட்டுத்தள்ளு குணம்
ஆகிய
இரண்டுமே இருந்தால்
சொல்லவும் வேண்டுமா

எவரேனும்
பிறர் செய்த
தீங்கினைப் பொறுத்து
மன்னித்து விட்டால்
உறுதியாக அதுவே
உயர்ந்த மனவீரம் கொண்ட
செயலாகும் (குரான் 42:43)

பழிவாங்கும்
சக்தி பெற்றிருந்தும்
மன்னித்துவிடுபவரே
இறைவனின்
மிகுந்த நேசத்திற்குாியவர் (நபிமொழி)

எதிர்பார்ப்புகளே இல்லாமல்
எந்த உறவுகளும் இல்லை
எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும்போது
வெறுப்பு வளர்வது இயல்பு

வெறுப்பைக் கட்டுக்குள் வைத்து
அதை வெகுவிரைவில்
வெளியேற்றத் தெரிந்தவனுக்கு
வாழ்க்கை வசப்படும்

கோபத்தைத் தூரத்தில் நிறுத்தி
அது வரும்போதெல்லாம்
வார்த்தைகளை
ஒளித்துக்கொள்பவனின்
வாழ்க்கைதான்
மகத்தான வாழ்க்கை

நின்றுகொண்டிருக்கும்போது
கோபம் வந்தால்
உட்கார்ந்துவிடுங்கள்
உட்கார்ந்தும் தீரவில்லையென்றால்
படுத்துக்கொள்ளுங்கள் (நபிமொழி)

இறைவன்மீது அச்சமுடையோர்
கோபத்தை அடக்கிக் கொள்வர்
மனிதர்களின் பிழைகளை
மன்னிப்போராய் இருப்பர்
அவர்களையே இறைவன்
நேசிக்கின்றான் (குரான் 3:134)

தீயினாற்
சுட்டபுண் உள்ளாறும்
ஆறாதே
நாவினாற் சுட்டவடு (குறள்)

எப்பொருள்
யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு (குறள்)

இன்னா
செய்தாரை ஒருத்தல்
அவர்நாண
நன்னயம் செய்துவிடல் (குறள்)

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பும் அமைதியும் நிறைக⁠⁠⁠⁠

No comments: