கெந்திக் கெந்தி
அந்த இந்தி வருது
மீண்டும்

வீறுநடைத் தமிழைத்
தாய்மொழியாய்க் கொண்ட
வெற்றித் தமிழா

நீ
உடைத்தனுப்பிய
ஒருகால் சப்பாணி
போதாதுபோலும்

இன்னொரு காலையும்
உடைத்தெறி

இனி 
ஒருபோதும்
தமிழின் எல்லைதொட
துகல் எலும்புமின்றி
நொறுங்கட்டும்

குச்சியூன்றும்
சூனியக் கிழடுகள்
கொடிபற்றித் தொங்கும்
சவலைக் குரங்குகள்
காணவும் சகியா
எழுத்துக்கள்

ஏறி முதுகமர
ஏய்ப்புக் குரலோடு
கெந்திக் கெந்திவரும்
அந்த மந்தியை
எழவே முடியா
முடமாக்கிப் 
புதை

காத்து நில்
தமிழா
தாய்த் தமிழை

அன்புடன் புகாரி









No comments: