>>>சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனேவின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.<<<

தீவிரவாதிகள் தைரியமாக மேடைபோட்டுப் பேசும் காலத்தில் நாம் வாழ்கிறோம்

தீவிரவாதிகள் எல்லோரும் ஹிரோக்களாக வர்ணிக்கப்படுகிறார்கள்

தீவிரவாதிகளிடம்தான் எல்லா நியாயமும் தர்மமும் இருப்பதாக நம்ப வைக்கப்படுகிறது

தீவிரவாதிகளின் இருப்பினால்தான் அரசியல் சுகப்பயணம் செய்கிறது

தீவிரவாதிகள்தாம் அறம் என்பதற்கான சரியான விளக்கம் சொல்லக் கூடியவர்களாய் இருக்கிறார்கள்

தீவிரவாதிகள் இல்லாவிட்டால் நாடு சுவாரசியம் குன்றியதாய் ஆகிப் போகும்

தீவிரவாதிகள் இல்லாவிட்டால் அரசின் ஓட்டு வங்கிகள் நிரம்பாமல் போய்விடும்

தீவிரவாதிகள் சுதந்திரத்தின் பொருளைச் சரியாக விளக்குகிறார்கள்

தீவிரவாதிகள் மட்டும்தான் நாட்டில் சுதந்திரம் பெற்ற குடிமக்கள்

அன்புடன் புகாரி
20171122


No comments: