பகுத்தறிவாளர்கள்
என்று சொல்லிக்கொண்டு
படுத்தி எடுப்பவர்களே

உங்களுக்குள்
கடவுள் பக்தியை
வலிய நுழைப்பதா
என்
பணி என்று
நினைத்தீர்கள்

உங்களின்
சொல் வன்முறையைக்
கிள்ளியெறிவது
மட்டுமே
என் தாகமும்
விவேகமும்

மானுடத்தை வாழவைக்கும்
அடித்தளப்
பகுத்தறிவு பெறுங்கள்
முதலில்

பிறகு
பகுத்தறிவாளர்கள் என்று
உங்களை
*அன்போடு* சொல்லிக் கொள்ளலாம்

மறந்துவிடாதீர்கள்
அன்போடு
சொல்லிக்கொள்வது
அடிப்படை அறிவு
அஃதிலாமல்
பகுத்தறிவு பெற
வழியே இல்லை

அன்புடன் புகாரி 
20171123

No comments: