*கவிதை பற்றி ஓர் உரையாரல்:*

கேள்வி: நன்றாய் வரவேண்டிய உங்கள் கவிதை இப்படி இழுவையாய் ஆகிவிட்டதாய் உணர்கிறேன். ரசிகர்களுக்கு ஏற்ப எழுதுபவர்கள்தானே பெருங்கவிகளாய் இருக்க முடியும்?

ரசிகனுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு எழுதுபவனே நல்ல கவிஞன் என்பதை நானும் ஏற்கவில்லை பாரதியும் ஏற்கவில்லை. நான் சினிமா எடுக்கவில்லை கவிதை எழுதுகிறேன்.

கேள்வி: ரசிகனின் கருத்தில் நியாயம் இருந்தாலுமா?

நியாயங்கள் காலத்தின் கையில். அதோடு எந்த ரசிகனை நினைத்துக் கவிதை எழுதவேண்டும்? அத்தனை ரசிகர்களும் ஒரே மாதிரி ரசிப்பார்களா? ஒரு ரசிகர் தனக்குப் பிடித்ததைத் தேடிப்பிடுத்து ரசிக்கிறார். ஒரு விமரிசகர் தனக்குப் பிடிக்காததைத் தேடிப்பிடித்து விமரிசிக்கிறார். நான் எனக்குப் பிடித்தக் கவிதைகளை எழுதிச் செல்கிறேன். ரசிகரும் விமரிசகரும் அவரவர் விருப்பத்தைச் செய்வதில் எனக்கு யாதொரு மறுப்பும் இல்லை விருப்பமே உண்டு.

அன்புடன் புகாரி
20171120

No comments: