எவரொருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார். வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் தான். -பகவத்கீதை 7:20
கண்ணால் காணமுடியாதது எவனோ, அவனே படைத்த இறைவன். அவனே கண்களுக்குப் பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண்கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை. -ரிக்வேதம் 6:45:16.
அன்பு நண்பர்களே, மேலே குறிப்பிட்டுள்ள வேதங்கள் இரண்டும் உண்மையானவையா என்று எவராவது எனக்கு அறியத் தருவீர்களா?
இப்பல்லாம் இட்டுக்கட்டி வரும் கதைகளே மிக அதிகம். இது எனக்குக் கடந்த வருடம் வந்த செய்தி.
அன்புடன் புகாரி
20171130

No comments: