மரம்விட்டுப் பிரிந்த பின்னும்
இந்த இலைகளுக்குத்தான்
எத்தனை மகிழ்ச்சி

நிலம்விழுந்து நடனமாடும்
பல்லாயிரம் வானவில்களாய்
எத்தனைக் கவர்ச்சி

அடடா இது
கனடிய இலையுதிர் காலம்

அன்புடன் புகாரி
20161028

No comments: