சமஸ்கிரத மொழிக்கு
இருக்கை கிடைத்து
ஆயிற்று ஆண்டுகள் பல

தோசைக் கல்லில் விழுந்த
பனித்துளிகளின்
உஷ்ஷ்... பயணம் போல
நோயுற்ற வாழ்வே
இன்றும்
சமஸ்கிருதத்திற்கு

என்ன செய்து
கிழித்ததாம் ஹார்வர்டு

வழக்கொழிந்து
போன மொழி
வாய்மொழியாய்
ஆனதா

வாய்நிறைத்துப்
பேசிக் கொண்டாடும்
மக்கள் மொழியாய்
ஆனதா

வணிகம்தானே
இத்தகைய
கல்வி நிறுவனங்களின்
வேர்களும் விழுதுகளும்

அன்புடன் புகாரி

No comments: