நேற்று
ஏரிக்குள்
ஏறினான் குடி

மகிழ்ந்தான்
மிதந்தான்
பெருமையில்

இன்று
குடிக்குள்
ஏறியது ஏரி

மூழ்கினான்
மிதக்கிறான்
நீர்விழுங்கி

தலை கெட்டக்
கமலம் இவன்
கூறுகெட்டக் கூவம்

நாற்றத்தின் முற்றத்தில்
நாசத்தின் உச்சத்தில்
சென்னை

அடடா...
அது உன் அன்னை

அன்புடன் புகாரி
20171105
கனடியப் பகல்நேர மாற்றுநாள்

No comments: