அணுசக்தி அறிஞர் நண்பர் கனடா ஜெயபாரதன் அவர்களிடம் நான் கேட்ட என் கேள்விகள் சிலவற்றிற்கு அவரின் பதில்கள் பின்வறுமாறு. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
​1. பூமியின் சுனாமி போன்ற பேராபத்துகளுக்கு பூமி மத்தியின் சூடு காரணமா அல்லது வானம் காரணமா?​
​பூகம்பத்தால் கடலில் எழும்பும் சுனாமிக்குப் பேரளவு சேமிப்பு இயக்கசக்தி [Stored Kinetic Energy] தேவைப்படுகிறது. அந்த இயக்கசக்தியைத் தருவது பூமியின் உட்கரு அணு உலை. விண்ணிலிருந்து [சூரியனிடமிருந்து] பூகம்பத்தைத் தூண்ட ஒளிக்கதிர் பாய்கிறது.

​2. ​சூரியனில் ஓட்டை விழ முடியுமா? அது என்ன திடப் பொருளா? வாயுப் பொருளா?​
சூரியன் மாபெரும் வாயுக்கோளம் [பேரளவு ஹைடிரஜன் + சிறிதளவு ஹீலியம்]​
In a recent report NASA has revealed that a monstrous coronal hole (low-density gas regions of the Sun’s atmosphere), measuring more than ten percent of the Sun’s surface area, has opened up on our star, the sun.
The footage was captured May 17 and 19, 2017 by the US space agency’s Solar Dynamics Observatory.
Coronal holes are areas on the Sun where the solar magnetic field extends up and out into interplanetary space, sending solar material speeding out in a high-speed stream of solar wind.
​​3. ​உஷ்ண சூடேற்றத்திற்கு நாம் இயற்கையை அழிப்பதுதான் காரணமா? அல்லது அது ஒரு இயற்கைச் சுழற்சியா? ​
​நாம் தினம் பெட்ரோல் கார்கள் மூலமும், நிலக்கரியால் தொழிற்சாலைகள் இயக்கியும் கரிவாயு [CO2] உற்பத்தி செய்வது ஓரளவு காரணம். காட்டுத்தீக்கள் ஒரு காரணம். எரிமலைகள் ஒரு காரணம். பூமியின் சுழல் அச்சு சற்று சாய்வதும் ஒரு காரணம்.​
​தற்போதைய பூகோளச் சூடேற்றம் ஒருபோக்கு மீளா நிகழ்ச்சி. இதைக் குளிர்ப்படுத்த பனியுகக் காலம் எப்போது வரும், பூமியின் அச்சு பழைய நிலைக்கு மாறுமா என்று ஊகிக்க முடியாது.​
​4. ​முன்பு உலகம் அழிந்து மீண்டும் தோன்றியதா?​
​60 மில்லியன் [ஆறு கோடி] ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவில் சுமார் 12 மைல் விண்பாறை விழுந்து பயங்கர சூடான பூமியில் டைனோசார்ஸ்கள் அத்தனையும் மரித்துள்ளன. பூமியே கொந்தளித்துச் சுற்றுப்பாதை நகன்று, சூரியனுக்கு அப்பால் தள்ளப்பட்டு, உஷ்ணம் தணிந்து புதிய பயிரினம், உயிரினம், மானிடம் தோன்றியுள்ளது என்று நான் அறிந்தது.
அன்புடன் புகாரி
20171130

No comments: