வாட்சப்பில் ஒரு நண்பர் சொல்கிறார். எல்லா கோவில்களும் முகலாயர் ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்டுவிட்டன. இப்போது இருப்பவை வெள்ளைக்காரன் கட்டியது என்கிறார். எனக்கு வியப்பளிக்கிறது.
உண்மை என்ன?
நான் தஞ்சாவூர்க் காரன். ஒரத்தநாட்டில் பிறந்தவன். அடிக்கடி தஞ்சை பெரியகோவில் - பிரகதீஸ்வரர் கோவில் சென்று அந்த வளாகத்தில் அமர்ந்திருப்பதை விரும்புபவன். அந்த அமைதி எனக்குப் பிடிக்கும். என் இளவயதில், திசைகள் பத்திரிகைக்காக எழுத்தாளர் கவிஞர்கள் ஓவியர்கள் என்று நாலைந்துபேர் வாரம் ஒரு சந்திப்பு நிகழ்த்துவோம். அதற்கு ஏற்ற இடம் கோவிலின் உள் வளாகம்தான் என்று முடிவெடுத்து அங்கேயே கூடுவோம்.
இப்போது அந்தக் கோவிலுக்கு மிக அருகிலேயே என் வீடு இருக்கிறது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்று நினைக்கிறீர்கள்?
அந்தக் கோவிலைக் கட்டியது வெள்ளைக்காரன் இல்லை. 1003-1010 ல் கட்டப்பட்ட அந்தக் கோவிலைப் போல பெரிய கிருத்துவ ஆலயமோ இஸ்லாமிய பள்ளிவாசலோ இந்தியாவிலேயே கிடையாது.
தாஜ்மகால் ஒரு சமாதி. பள்ளிவாசல் அல்ல. அந்த சமாதியைவிட உயர்வான கட்டிடக் கலையைக் கொண்டது தஞ்சை பெரியகோவில்
ஏன் ஒருசில தமிழர்களின் மனம் இப்படிச் சுருங்கி மதவெறிக்குள் சிக்கிச் சீரழிகிறது சமீபகாலமாக?
அன்புடன் புகாரி

No comments: