ஆமாம்
உங்களுக்கென்ன

ஆர் எஸ் எஸ் தான் இந்துக்கள்
ஐ எஸ் ஐ எஸ் தான் முஸ்லிம்கள்
என்று சொல்லி
குளிர்நோவு கண்ட
பூனையைப்போல் பினாத்துவீர்கள்

ஒருங்கிணைந்து
இவர்களை
உண்டு இல்லை என்று
ஆக்க
முன்வரமாட்டீர்கள்

மையப் புள்ளிவிட்டு
ஒளிந்தோடுவதே
ஒப்பிலாப் பணி உங்களுக்கு

கேட்டால்
பகுத்தறிவு என்பீர்கள்

உண்மையான பகுத்தறிவு
ஓரமாய் நின்று
தேம்பித் தேம்பி அழும்
பாவம்

அன்புடன் புகாரி
20161028

No comments: