எனக்கு இறைவன் என்பவன் மனிதன் அல்ல.
உருவமே இல்லா இணையே இல்லா மாபெரும் சக்தி.
ஆகவே ஆண்பால் பெண்பாலுக்கு அப்பால் அவன்.
பிறகு ஏன் இறைவனை அவன் என்கிறாய் என்கிறீர்களா?
என் மகளை வாடா என்று நான் அழைத்தால் என் மகள் ஆண்பிள்ளையாகிவிடுமா?
என் மகள் வந்தது நின்றது சென்றது என்று நான் சொன்னால் இலக்கணம் தடுக்கலாம் இதயம் தடுக்குமா? என் மகள் விலங்கினம் ஆகிவிடுமா?
என் மகளைப் பஞ்சவர்ணக்கிளி என்று கொஞ்சினால் என் மகள் பறவையினமாகிவிடுமா?
இலக்கணத்தை எப்போதுமே இலக்கியம் வென்றெடுத்தே செல்லும்.
கற்பனைகளை எப்போதும் உண்மை களையெடுத்தே நடக்கும்
இறைவனை அவன் என்று அழைப்பதால் இறைவன் மனிதன் ஆகிவிடமாட்டான்.
இது என்னுள்ளக் கருத்து.
மறுப்போரை வெறுப்போனும் நானில்லை ஏற்போனும் நானில்லை.
அன்புடன் புகாரி

No comments: