நிலா ஒன்றுதான்
ஆனால்
நிலவைப் பற்றிய
எண்ணங்களோ
ஒரு நூறு
ஒரு கோடி

இறைவன் ஒருவன்தான்
ஆனால்
அவனைப் பற்றிய
சிந்தனைகளோ
பல நூறு
பல கோடி

ஒவ்வொரு
சிந்தனைக்காகவும்
பக்தக் கண்களில்
இறைவன்
கணக்கற்றக்
கற்பனைப் பிறப்பெடுக்கலாம்
காலங்கள் தோறும்

ஆனபோதிலும்
பொய்யெல்லாம்
மெய்யாகுமா
உண்மைப் பூதலத்தில்

அன்புடன் புகாரி

No comments: