பூக்காரிகளின் புகாரி

MohdAppas Rajak கவிஞர் புகாரியா அல்லது பூக்காரியா என்று கேட்டார் என் கவிதை நூல் ஒன்றைக் கண்டுவிட்டு

முதல்வர் Chandra Bose அன்புடன் புகாரி இதுவும் நல்லா இருக்கு. இது தங்கள் அடைமொழிப் பெயராக மாறிப் புழக்கத்தில் வரப் போகிறது என்றார் நகைச்சுவையாக

பூக்காரிகளின் புகாரி என்றால் என்ன என்று யோசித்தேன், இன்னும் மீளவில்லை -:)

உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று எழுதி முகநூலில் இட்டேன்

*

வந்த பதில்களும் தொடரும் சுவாரசியமும்:

Chandra Bose "பூக்காரப் புகாரி" எனச் சுருக்கிப் பட்டம் வழங்கலாம். தமிழ்ப் பூக்களைக் கவிதையாகத் தொகுத்துத் தருவதால்......

Lion Mansure Pm பூக்களின் புகாரி பொருத்தமாய் இருக்கும்

Kulam Rasool தப்பாக போகுமே. வீட்டிற்கு தெரியாது பார்த்துக் கொள்ளுங்கள்.

குலாம் ரசூல் அவர்களுக்கு என் பதில்:

பூக்காரிகளை எங்கு பார்த்தாலும் நான் எந்த அவசர வேலையில் சென்றாலும் சட்டென்று நின்றுவிடுவேன்.

ஏன் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கும் என் மனைவிக்கும் மல்லிகை முல்லை என்றால் கொள்ளைப் பிரியம்.

இந்தப் பூக்காரிகளால் எனக்குக் கிடைத்த ஆனந்த நாட்கள் மிக அதிகம்

(இந்தக் கடைசி வரியையும் வீட்டிற்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவீர்களே)

அன்புடன் புகாரி

No comments: