>>>வாதாடல்களால் யாருடைய கருத்துகளும் மாறுவதில்லை என்பதால் சமூக ஊடகங்களால் ஒரு பயனும் இல்லாமல் போகிறது. <<<
நான் வேறுமாதிரி நினைக்கிறேன் மணி மணிவண்ணன்
வாதாடுபவர் தன் ஈகோவால் விடாப்பிடியாய் நின்று விரோதியாய்க்கூட மாறி ஓடிப்போகலாம்.
ஆனால் அந்தக் கருத்தாடலைக் கேட்போரின் உள்ளத்தில் பெரும் தாக்கம் ஏற்படும். அறிதல் ஏற்படும். அதுதான் கருத்தாடலின் பெரும் பலன்.
எதிர்த்து வாதிடுபவர் ஒருவர் அல்லது இருவர். ஆனால் அறிதல் புரிதலில் மாற்றமடைவோர் பல நூறு பேர்.
அதோடு இன்னொரு பயனும் எனக்குக் கிடைக்கிறது.
ஒரு கருத்தாடலில் இறங்கும்போது எனக்குப் பல தேடல்கள் எழுகின்றன. நான் தேடத் தொடங்குகிறேன். அதனால் என்னையும் நான் வளர்த்துக்கொள்கிறேன்.
அன்புடன் புகாரி

No comments: