காமராஜரைத் தோற்கடித்தது திராவிடர் கழகம் அல்ல.
காமராஜர் தோற்பதை அண்ணாவே விரும்பவில்லை.
ஆனால் காமராஜர் தன் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.
காரணம் தெரியுமா?
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் யார் சுனாமியாய் நின்றார்களோ அவர்களைத்தான் தமிழர்கள் நேசித்தார்கள், வெல்லச் செய்தார்கள்.
தமிழர் தமிழ் தமிழ்மண் இந்த உணர்வு பூர்வமான தங்கச் சங்கிலி மிக மிக உறுதியானது. அதை அழிக்க இதுவரையிலான அத்தனை மத்திய அரசின் முயற்சிகள் எல்லாம் படு தோல்வி.
இப்போது மிக அதிக அளவில் கொடூரம் தமிழனுக்கும் தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் நடக்கிறது.
மீண்டும் வெல்வது தமிழும் தமிழனுமாகவே இருப்பான் என்பதில் அசைக்க முடியாத நம்பிகையோடு நான் இருக்கிறேன்.
மற்றபடி அறமற்ற செயலில் தமிழன் ஈடுபட்டால், நான் நிச்சயம் கண்டிக்கவே செய்வேன்.
இதுவரையிலான திராவிட தலைவர்களை நான் விரும்பியதில்லை.
ஆனால் தமிழ்மண் காக்கும் தமிழ் காக்கும் திராவிட கட்சிகளை நான் வரவேற்கிறேன் ஆதரிக்கிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன்
அன்புடன் புகாரி

No comments: