பாஸ்கர், கனடா
இது எனது சபரிமலை சென்ற நினைவுகளை திருப்பித. தந்தது. எருமேலி சென்றவுடன், வாவர் பள்ளிவாசலில் வாவரை வணங்கி அங்கிருந்த சாஸ்தா ஆலயத்திற்கு ஆடிக்கொண்டே செல்வது இன்றும் இருக்கும் நடைமுறை. என் நினைவுகள் சரியாக இருந்தால் அந்த பள்ளிவாசலில் திருநீறு கூடத்தருவார்கள். சிறுவயதில் சென்றது. வாவர் பற்றிப் பாடும் ஒரு ஐயப்பன் பாடல் கூட உள்ளது.
பாஸ்கர்,
நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் ஓர் உண்மையை நான் இங்கே சொல்லியாக வேண்டும். அப்போதுதான் புரிதல் வலுப்படும்.
வாவர் என்பது ஒரு பெரியவரின் பெயர். சூஃபி முஸ்லிம்கள் இவரை அவுலியா என்று அழைப்பார்கள். இவர் போல நாகூர் முத்துப்பேட்டை ஹாஜிஅலி என்று ஏராளமான இடங்களில் இதுபோன்ற பெரியவர்களின் அவுலியாக்களின் சமாதிகள் உண்டு.
பள்ளிவாசல் என்பதும் தர்கா என்பதும் ஒன்றல்ல.
பள்ளிவாசல் என்றால் அதனுள் ஒன்றுமே இருக்காது. ஒரு சுத்தமான இடம். இறைவனைத் தொழுவதற்காக. இங்கும் அங்குமாக சில குர்-ஆன் பிரதிகள் மட்டுமே இருக்கும். வேறொன்றையும் காணமுடியாது. ஆகவேதான் சுத்தமான எந்த இடமும் பள்ளிவாசல் ஆகிவிடும். பயணம் செல்லும்போது பாலைவனம் பள்ளிவாசலைப் போல ஆகிவிடும். வீட்டில் ஓர் சுத்தமான அறை பள்ளிவாசலைப்போல ஆகிவிடும். பள்ளிவாசல் என்பதே எல்லோரும் சகோதரத்துடன் இணைந்து வந்து தொழுவதற்காகத்தான். மற்றபடி இருக்கும் இடத்திலிருந்தே தொழுது கொள்ளலாம்.
தர்கா என்றால் அதனுள் ஒரு சமாதி இருக்கும். அதனைச் சுற்றி சில நேரம் சிலர் அமர்ந்திருப்பார்கள். அந்த சமாதியில் அடங்கி இருக்கும் பெரியவருக்கு சொர்க்க பதவிகளை, நிறைவான மறுமை வாழ்வைத் தந்தருள் இறைவா என்று சமாதியைத் தரிசிக்க வரும் முஸ்லிம்கள் வேண்டிக் கொள்வார்கள்.
இது இறந்துபோன எல்லோருக்குமே செய்யக் கூடிய ஒன்றுதான் என்றாலும், சமூக சேவைகள் செய்து உயர் காரியங்கள் செய்து உயிர் நீத்த பெரியவர்களுக்கு தர்கா கட்டி இப்படி இறைவனிடம் வேண்டிக்கொள்வது ஒரு வழக்கம்.
அங்கே அடங்கி இருப்பவருக்கு நமக்கு அருளும் சக்தி கிடையாது. இறைவனுக்கே அந்த சக்தி உண்டு.
அன்புடன் புகாரி
20171211

1 comment:

ப. சிவக்குமார் said...

வணக்கம் ஐயா!

நான், உங்களுக்கு ஒரு செய்தி அனுப்ப விருப்பினேன்!
ஆனால், உங்கள் email id கிடைக்கவில்லை.
அதனால், இதில் அனுப்பியதற்க்கு மன்னிக்கவும்!

நான், பெற்றோரின் நிலையைப் பற்றி, ஒரு blog எழுதியிருக்கிறேன்! அதை நீங்கள், ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!

நான் ஒரு எழுத்தாளனும் அல்ல! எழுதுவது எனது பொழுதுபோக்கும் அல்ல! இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல! இருப்பினும் நான் எழுதுவது, சமுதாய மாற்றத்திற்க்காக மட்டுமே!

www.lusappani.blogspot.in