ஆயிரம் இருக்கைகள் அமைத்து
ஆய்வதைக் காட்டிலும்
சால உறு தவ நனி கூர் கழிச்
செயல் ...

ஆங்கோர் தமிழனுடன்
தமிழில் உரையாடி ...

தாய்நிலத் தெருக்களிலும்
தமிழ்வளர்ப் பாடங்களிலும்

புலம்பெயர் கூடுகளிலும்
புதுப்பிஞ்சு நாவுகளிலும்

வாழும் மொழியென
தமிழை
வாழவைப்பதே

அன்புடன் புகாரி

No comments: