பெண்ணின் எதிரி

பெண்ணின்
விடுதலைக் கப்பல்
ஆண்களின்
நாகரிகக் கடலில்தான்
அமைதிப் பயணம்
செல்லவியலும்

நல்ல
பண்பாளர்களாய்
வன்முறையற்றவர்களாய்
ஆணினம்
வளர்ந்தால் மட்டுமே
அப் பொன்வானில்
பெண் பிறைநிலாக்கள்
அமுத ஒளிசிந்தி
அமர்க்களமாய் நீந்தும்

ஆண்களை
நாகரிகம் மிக்கவர்களாய்
பண்பாளர்களாய்
வன்முறையற்றவர்களாய்
மாற்றுவதற்கு
எந்த ஓர் ஆணாலும்
எத்தனைக்
குட்டிக்கரணம் போட்டாலும்
இயலாது

ஆனால்
அது பெண்களுக்கோ
வெண்டைக்காய்
நறுக்குவதைப்போல
எளிதானது

எங்ஙனமெனில்
பெண்தானே
அத்தனை ஆணுக்கும் தாய்

அவள்தானே
வளர்த்தெடுக்கிறாள்
ஆண்களை இப்படி

பெண்ணின்
சுதந்திரத்திற்கு
பெண்ணேதானே
எதிரியாகிறாள்

No comments: